"தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!
2026- 27 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இந்த முக்கிய கூட்டத்தொடர், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் என். மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்துகிறார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு மே மாதம் பதவியேற்ற பிறகு முன்வைக்கும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். நேற்றைய தினம் வரை அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் சபை நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.இந்த கூட்டத்தொடர் அரசியல் பரபரப்புடன் தொடங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடிகை குறித்த கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டு மதராஸ் உயர்நீதிமன்ற தலையீட்டால் விடுதலை பெற்ற பின்னர் சபைக்கு வந்திருக்கிறார். முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையேயான நேருக்கு நேர் மோதல் சபையில் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்று சபைக்குள் நுழைந்தனர். அதேநேரம் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆரம்பத்திலேயே வளாகத்தில் குழுமியிருந்தனர்.பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அரசு மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க: கனிம ஏற்றுமதி தடைக்கு காரணம் என்ன? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!
அதில் முந்தைய ஆட்சியின் நிதி மேலாண்மையில் உள்ள குறைபாடுகள், மாநிலத்தின் மொத்த கடன் சுமை மற்றும் சொந்த வரி வருவாயில் ஏற்பட்ட சரிவு ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இந்த பின்னணியில் புதிய அரசு நிதி ஒழுங்கை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு, இலவச பேருந்து பயணம், வருவாய் சீர்திருத்தங்கள் மற்றும் ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு ஆவணம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தாகசெய்கிற நிலையில், உரையை வாசித்து வருகிறார்.
இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!