"காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!
தஞ்சையில் தற்கொலைக்கு முயன்ற நம்பரை காப்பாற்ற சென்ற இயக்கி தரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் நடந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் குமார் என்ற 30 வயது இளைஞர் அங்கு ரயில்வே கேட் கீப்பராகப் பணியாற்றி வந்தார். சுமார் மூன்று ஆண்டுகளாக அவர் இந்தப் பணியில் இருந்தார். பாபநாசத்தில் நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கியிருந்த அவர், தனது பணியை உண்மையாகவும் மனிதநேயத்துடனும் செய்து வந்ததாக அவரது சக ஊழியர்கள் கூறுகின்றனர்.
நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் அந்தப் பகுதியை அணுகிக் கொண்டிருந்தது. அப்போது ராகுல் தனது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அதே நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ரயில் தண்டவாளத்தை நோக்கிச் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றார். இதைக் கண்ட ராகுல் உடனடியாக அந்த நபரைக் காப்பாற்ற ஓடினார். தனது உயிரையே பொருட்படுத்தாமல் அந்த அந்நியரை இழுத்துத் தள்ள முயன்றார்.ஆனால் வேகமாக வந்த ரயில் இருவரையும் மோதிக் கொண்டது.
இருவரும் தண்டவாளத்தில் விழுந்து சுமார் 500 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டனர். உடல்கள் சிதறிப் போன நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில் ஓட்டுநர் இதை உணர்ந்து ரயிலை நிறுத்திப் பார்த்தபோதுதான் இந்தத் துயரம் தெரியவந்தது. உடனடியாக கும்பகோணம் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அய்யய்யோ... எம்மா.. எம்மா.! உதயநிதி தியாகியா.? விளாசிய தவெக.!!
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராகுலுக்கு திருமணம் ஆகி வெறும் ஆறு மாதங்களே ஆகியிருந்தது. சமீபத்தில் தனது மனைவியைச் சந்தித்துவிட்டுப் பணிக்குத் திரும்பியிருந்தார். இளம் வயதில், புதுமணத் தம்பதியாக வாழ்க்கையைத் தொடங்கியிருந்த அவர், ஒரு அந்நியரின் உயிரைக் காப்பாற்ற முயன்றபோது தனது உயிரையே இழந்துவிட்டார். அவரது சக ஊழியர்கள், “அவர் சிறப்பாகப் பணி செய்பவர். மனிதநேயம் நிறைந்தவர். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் முகம் தெரியாத ஒருவரைக் காப்பாற்றச் சென்றார். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவர் வாழ்ந்திருக்க வேண்டும்” என்று வருந்தினர்.இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போது தன் உயிரையே தியாகம் செய்த ராகுலின் செயல் அனைவரையும் உலுக்கியுள்ளது.
இதையும் படிங்க: "காவிரித் தாய் அருளால் செழிக்கட்டும் தமிழகம்"... குடும்பமாய் குவிந்த மக்கள்... நெகிழவைத்த ஆடிப்பெருக்கு...!