×
 

பணிச்சுமையால் அரங்கேறிய விபரீதம்... ஆரணியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை...!

ஆரணியில் டாஸ்மாக்கில் பணிசுமை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டாஸ்மாக் சூப்ரவைசர் தூக்கிட்டு தற்கொலை டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் உசேல் தெருவை  சேர்ந்த
 ஹரிநாத்((56) கடந்த 20 ஆண்டு காலமாக வேலூர் மாவட்டம் அமிர்தி பகுதியில்
உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்ரவைசராக பணியாற்றி வருகின்றார்.

இதில் ஆரணியிலிருந்து தினமும் அமிர்திக்கு சென்று வருவதாகவும் பணியில் அதிகளவில் பணிச்சுமை இருப்பதால் ஹரிநாத் மனதளவில் விரக்தியில் இருந்துள்ளதாகவும் டாஸ்மாக் கடை பணியை விடுவித்து கொள்வதாக வீட்டில் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பணியை முடித்து விட்டு இரவு சீக்கிரமாக வந்து என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி வீட்டின் மாடிமேல் சென்றுள்ளார். பின்னர் அவரது மனைவி சந்திரகலா சென்று பார்த்த போது விசிறியில் நைலான் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க: காற்றில் பறந்த சி.எம். உத்தரவு... மூடிய வேகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்... மக்கள் கொந்தளிப்பு...!

இதனை கண்ட மனைவி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஹரிநாத் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் சூப்ரவைசர் மனைவி சந்திரகலா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரணியில் அரசு டாஸ்மாக் சூப்ரவைசர் பணிச்சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: 20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share