முதல்வரை நம்புங்க..! சீக்கிரமே நல்ல செய்தி வரும்..! இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட அன்பில் மகேஷ் வேண்டுகோள்..!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தினம்தோறும் போராட்டம் போது போலீஸாரால் கைது செய்யப்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இடைநிலை ஆசிரியர்கள் 35 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குட் நியூஸ்... பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு..! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு...!
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிடுங்கள் என்றும் வலியுறுத்தினார். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூவர் குழு விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மூவர் குழுவின் அறிக்கையின்படி இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 5781 ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க… தமிழக அரசின் புதிய திட்டம்..! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!