பக்தர்கள் கவனத்திற்கு... திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் விநியோகம் எப்போது? முழு விவரம்...!
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் இட அறைகள் முன் பதிவு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான திருப்பதி தேவஸ்தானம் செய்தி குறிப்பில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2026 பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் இட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஆர்ஜித சேரிகளான சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற சேவைகளின் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை 20- ஆம்தேதி காலை 10 மணி வரை மின்னணு முறையில் செய்ய ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்றும் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முன் பணம் செலுத்தியவர்களுக்கு இந்த டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகளை 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் மாலை 3 மணிக்கும் வெளியிடப்படும் என்றும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் போன்றவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: சுரங்கத்தில் கோர விபத்து... கொத்து கொத்தாய் மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... 40 பேர் பலி...!