×
 

மோடி போட்ட ஸ்கெட்ச்.. சசிதரூரை கொம்பு சீவிவிட்ட பாஜக.. ட்விட்டரில் முட்டுகொடுக்கும் கார்கே!

சசி தரூர் - கார்கே இடையிலான வார்த்தை போர் முற்றியுள்ள விவகாரம் காங்கிரசில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதற்காக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டினார்.

இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரிவிக்க பிரதமர் மோடி விரும்பினார். மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய பின் நாடு திரும்பின.

ஒரு குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமை வகித்தார். வெளிநாட்டுப் பயணங்களிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சசி தரூர் புகழ்ந்து வந்தார். அமெரிக்கா, கொலம்பியா உள்பட 5 நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்ட சசி தரூர், அந்நாட்டின் ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் முதலானவர்களை சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். நாடு திரும்பிய பின் தனது பயணம் குறித்து அவர் ஒரு நாளிதழில் கட்டுரை எழுதினார். 

இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

அதில் பிரதமர் மோடியின் ஆற்றல், ஊக்கம், விருப்பமுடன் பங்கேற்கும் தன்மை போன்றவை உலக அரங்கில் இந்தியாவின் முதன்மை சொத்தாக இருக்கிறது என புகழந்து தள்ளினார். மோடியை சசி தரூர் புகழ்வது, பாஜ அரசை பாராட்டுவது  காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு எரிச்சலூட்டியது. சமீபத்தில் நடந்து முடிந்த நிலம்பூர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என சசி தரூர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். 

மேலும், காங்கிரஸ் தலைமையிடம் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதை பொது வெளியில் பேச விரும்பவில்லை. மூடிய அறைக்குள் பேசினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தரூர் கூறியிருந்தார். இது பற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, சசி தரூரின் ஆங்கில மொழிப் புலமைக்காகத்தான் காங்கிரஸ் காரிய கமிட்டியில் வைத்துள்ளோம். நானும் அவருக்கு சப்போர்ட் செய்தேன் எனக்கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள சசிதரூர்,  பறவைகள் பறப்பதற்கு யாரிடம் பெர்மிஷன் கேட்க வேண்டும்? வானத்திற்கு எல்லை ஏது? என பதிவிட்டார். 

அவருக்கு பதில் அளித்த கார்கே, நாங்கள், நாடு தான் முதன்மை என்கிறோம். முப்படைகளின் பக்கம் நிற்கிறோம். ஆனால் சிலர் மோடி தான் முதன்மை, நாடு அப்புறம் தான் என்கின்றனர். நாங்கள் ஒரே கட்சியாக செயல்படுகிறோம். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் முப்படைகளின் பக்கம் நிற்கும் போது, சிலர் தனிப்பட்ட நபரை புகழ்ந்தால், அது அவர்களின் விருப்பம்.

எங்களுக்கு நாடும், நாட்டின் பாதுகாப்பும் தான் முக்கியம். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதட்டும். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என கார்கே கருத்து தெரிவித்துள்ளார். சசி தரூர் - கார்கே இடையிலான வார்த்தை போர் முற்றியுள்ள விவகாரம் காங்கிரசில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் குறித்து கேள்வி கேட்ட மகன்.. இதை அனுமதிக்க முடியாது! சசிதரூர் ரியாக்‌ஷன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share