×
 

மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

மயோனைஸ் பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைவ மற்றும் அசைவ உணவுகளைத் தொட்டு சாப்பிடுவதற்கு இந்த மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மயோனைஸுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருந்த தடை உத்தரவில், சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தமிழகத்தில் மயோனைஸ் உணவுப்பொருளுக்கு ஏப்.8ம் தேதி முதல் அடுத்த ஆணடு வரை தடை விதிக்கப்படுகிறது. ஓராண்டுக்கு இந்த தடை விதிப்பு தொடரும். தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உட்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதையும் படிங்க: இனி 'NO' பிளாஸ்டிக் 'STRAW'.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு..!

மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உணவகங்களில் மயோனைஸ் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மயோனைஸ் பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ஒரு சில உணவகங்களில்  மீண்டும்  மயோனைஸ் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மயோனைஸ் பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்தும் கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share