×
 

தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை பழிவாங்க இளைஞர் செய்த காரியம்... இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி...!

தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை பழிவாங்க அந்த நபரின் 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவர்கள், தனது தாயுடன் மாணவர்களின் தந்தை தகாத உறவில் இருந்ததை அறிந்து, ஆத்திரத்தில், பள்ளி மாணவர்களை புறா பிடித்து தருவதாக கூறி அழைத்துச்சென்று கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளதாக கேசவபாலாஜி 19 என்பவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தேனி மாவட்டத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.  

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெரு பகுதியை சேர்ந்த, சின்னத்தம்பி-செல்வி தம்பதியரின் மகன்கள், 13 வயதான சபரீசன்13, 12 வயதான ஹரீஸ் இருவரும் அதே பகுதியில் உள்ள வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் முறையே 7 மற்றும் 6ஆம் வகுப்பில் பயின்று வருகின்றனர். கடந்த 24ஆம் தேதியன்று, பள்ளி முடிந்து வீடுதிரும்பிய சிறுவர்கள், இருவரும் மாலையில் வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பாததால், 25ஆம் தேதி காலை போடிதாலுகா காவல்நிலையத்தில் தங்களது மகன்கள் இருவரையும் நேற்று மாலை முதல் காணவில்லை என புகாரளித்தனர்.

இதையடுத்து போடி தாலுகா போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது. இரண்டு சிறுவர்களையும் இளைஞர் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் கிடைத்த நிலையில், கேசவபாலாஜி 19 வயது இளைஞனை பிடித்து விசாரித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேனியில் அதி பயங்கரம்... நகைக்காக கல்லால் அடித்து மூதாட்டி கொடூர கொலை...!

தனது தாயுடன் சிறுவர்களின் தந்தை சின்னத்தம்பி தகாத உறவில் இருந்ததை அறிந்த ஆத்திரத்தில் அவரை பழிவாங்கும் நோக்கத்தில், அவரது மகன்கள் இருவரையும் கிணற்றில் காட்டுப்புறா இருப்பதாகவும், தான் அதை பிடித்து தருவதாகவும் நைசாக பேசி, போடி கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பு கிணற்றுக்கு அழைத்து சென்று இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை போடி கரட்டுப்பட்டி அருகே தென்னந்தோப்பில் உள்ள சுற்றுச்சுவர் இல்லாத 150அடி ஆழ கிணற்றில் சிறுவர்கள் இருவரும் சடலமாக கிடந்ததை அறிந்த போடி தாலுகா போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து கொலை வழக்கு பதிவு செய்தனர்.

கேசவபாலாஜியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவர்கள் வசிக்கும் அதே தெருவை சேர்ந்த கணேசன் என்பவரது மகனான கேசவபாலாஜியின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளதால், கேசவ பாலாஜியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புறாவிற்கு ஆசைப்பட்டு சிறுவர்கள் இருவரும் கயவனை நம்பி கடைசியாக அவனுடன் ஆர்வத்தோடு செல்லும் காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அதிர்ச்சி... சக நோயாளி தாக்கி கொலை..! அதிர்ச்சி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share