×
 

துண்டான வடமாநில தொழிலாளியின் கை..! கவரில் அனுப்பிய கொடூரம்! சங்கரன்கோவில் மருத்துவமனையில் அலட்சியம்..!

வட மாநில தொழிலாளி கை துண்டான நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அலட்சியப்போக்கோடு செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்தின் முக்கிய சுகாதார நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தாலுகா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் அன்றாட சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய அமைப்பாக உள்ளது. இந்த மருத்துவமனை பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சேவைகளை வழங்குகிறது.

சில சிறப்பு சிகிச்சைகளான தைராய்டு அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் வெற்றிகரமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இந்த மருத்துவமனை, ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படுகின்றன.

சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்கரன்கோவில் கல்குவாரி ஒன்றில் பணியாற்றிய வடமாநில தொழிலாளி ஒருவரின் கைதுண்டானதாக தெரிகிறது.

இதையும் படிங்க: விரைவில் “அம்மா ” நியூஸ் சேனல்!! கட்சியை மீட்க எடப்பாடி பழனிசாமி புது திட்டம்!

வடமாநில தொழிலாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துண்டிக்கப்பட்ட கையை பதப்படுத்தாமல் மேல் சிகிச்சைக்காக முறையாக அனுப்பி வைக்காமல் பிளாஸ்டிக் கவரை சுற்றி அனுப்பிய கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கையை கவரில் போட்டு அனுப்பிய அவல நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share