#BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!
தென்காசியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டிப் படுகொலை
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் ஒருவர் தலை துண்டித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள தீபத்திடல் பகுதியில் உள்ள கடையில், கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பொருட்கள் வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா மற்றும் கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, கொலை செய்யப்பட்ட நபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரை அலறவிட்ட சம்பவம்... ரத்தம் தெறிக்க தெறிக்க இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்...!
இந்த நிலையில், தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கிளாசன் ஜோஸ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தக் கொலைக்கான பின்னணி என்ன? கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை செய்த நபருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாகக் கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொலை செய்யப்பட்டவரின் அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மார்க்கெட் பகுதி என்பதால், அங்கு பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இன்று இரவுக்குள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கொலையாளியை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... இளம் பெண்ணை வெட்டி சரித்த போலீஸ் ஏட்டு கைது... பகீர் பின்னணி...!