×
 

தைலாபுரம் VS பனையூர்.. திலகபாமா பொருளாளர் பதவியில் நீடிப்பார்... அன்புமணி பதிலடி..!

திலகபாமா பாமகவின் பொருளாளர் பதவியில் நீடிப்பார் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

அன்புமணி ஆதரவாளரான திலகபாமாவை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் சற்றுமுன் அறிவித்ததாக தகவல் வெளியானது. அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலையில் ராமதாசையும் வசைப்பாடி வந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ராமதாஸ் தற்போது திலகபாமாவை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி அறிவித்துள்ளார். பொருளாளர் பொறுப்பில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கிய நிலையில் பதவியில் அவர் தொடர்வார் என்று அன்புமணி பதிலடி அறிக்கையை வெளியிட்டுள்ள பாமக நிர்வாகிகள் அனைவரும் திலகபாமாவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.    

 

இதையும் படிங்க: பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம்... ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

தந்தை மகன் மோதலால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. பாமகவின் நிர்வாகங்களை தைலாபுரத்தில் ராமதாஸ் ஒரு பக்கம் அறிவிக்க, பனையூர் அலுவலகத்தில் இருந்து பதில் அறிவிப்புகளை அன்புமணி வெளியிடுகிறார். இப்படி மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பாமக இரண்டாக உடைந்து தொண்டர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.        

இதையும் படிங்க: அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share