தலைவர் அடிச்சா அது ஆசீர்வாதம்..! திருமாவிடம் பளார் வாங்கிய இளைஞர் அந்தர் பல்டி..!!
திருமாவளவனிடம் அடி வாங்கிய இளைஞர் தலைவர் அடித்தால் ஆசீர்வாதம் என கூறியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் ஏப்ரல் 2026-ல் நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக சார்பில் பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் சக்திவேலைக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சார வாகனத்தில் ஏறி பொதுமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
பிரச்சாரம் சூடுபிடித்த நிலையில், விசிகவின் இளம் தொண்டர்கள் சிலர் உற்சாகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சார வாகனத்தின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்கள், திருமாவளவன் பேசுவதைத் தடுக்கும் வகையில் கூச்சலிட்டு, வாகனத்தைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தனர். திருமாவளவன் பலமுறை “ஏய், கீழே இறங்கு முதல்ல” என்று எச்சரித்தும், அந்த இளைஞர்கள் கேட்காததால் அவரது பொறுமை இழந்தது.
ஒரு இளைஞர் வாகனத்தின் முன்புறம் ஏற முயன்றபோது, ஆத்திரமடைந்த திருமாவளவன் அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். இந்தக் காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது. சம்பவத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட இளைஞர் வெளியிட்ட விளக்கம் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர், “திருமா அடித்ததை என் அப்பா மாதிரி பார்க்கிறேன். அவர் என்னை அடித்திருந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: இரட்டை இலைக்கு ஒரு ஓட்டு கூட போட்டுறாதீங்க; மீறி போட்டீங்கன்னா... திருமாவளவன் எச்சரிக்கை...!
என் மீது அவரது கை கூட படவில்லை என்றாலும், அடித்திருந்தாலும் அது என் தலைவரின் அன்பு” என்று கூறினார். கீழே விழுந்தபோதும் தன் மீசையில் மண் ஒட்டாத வகையில் நிதானமாக விளக்கம் அளித்த அந்த இளைஞர், திருமாவளவனை தன் தலைவராகவே மதிப்பதாகவும், இந்தச் சம்பவத்தை கட்சியின் உள் விவகாரமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவும் வைரலாகி, பலரிடையே பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!