×
 

விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

அமைச்சரவையில் பங்கு கொடுத்த முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.

2026 தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது. விசிக மற்றும் IUML ஆகியவை முதலில் திமுக கூட்டணியின் பகுதியாக இருந்தபோதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன. இந்த ஆதரவு தவெக அரசை உறுதிப்படுத்த உதவியது. 

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்த இரு கட்சிகளும் இணைவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசிக மற்றும் IUML-க்கு அமைச்சர் பதவி அளிக்க திறந்த மனதுடன் அழைப்பு விடுத்தனர். இது சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை அடிப்படையிலான உள்ளடக்கிய அரசை உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து IUML தரப்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம். ஷாஜகான், விசிக தரப்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. வண்ணி அரசு ஆகிய இருவரும் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதனிடையே முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார். ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுத்துள்ள தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய்க்கு நன்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

விடுதலை சிறுத்தைகளின் கனவு என்ற நினைவாகியுள்ளதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என முழக்கமிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 

இதையும் படிங்க: திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share