"விசிக துணை"..! 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடரும்... திருமாவளவன் உறுதி..!
ஐந்தாண்டுகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி தொடரும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவான அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டதாக அமைந்தது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களுடன் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியது. இந்தச் சூழலில், தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய பங்கு வகித்தது. முதலில் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்த அக்கட்சி, பின்னர் தவெக அமைச்சரவையில் இடம்பெற்று, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.
2026 தேர்தலில் விசிக, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்த நிலையில், விசிக தன் நிலைப்பாட்டை அறிவிக்க காலதாமதம் செய்தது. விசிக தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஆதரவு கடிதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய விசிக, தவெகவின் பக்கம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதிப்படுத்தியது. இதன் மூலம், ஜனாதிபதி ஆட்சி அமையும் அபாயத்தைத் தவிர்த்து, விஜய் தலைமையில் அரசு அமைவதற்கான வழி திறக்கப்பட்டது.
இந்த ஆதரவு அளிப்பதற்கான காரணங்களை விசிக தரப்பு விளக்கியபோது, தமிழ்நாட்டில் நேர்த்தியான அரசு அமைய வேண்டும் என்பதும், மதச்சார்பற்ற, முற்போக்கு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகக் குறிப்பிடப்பட்டது. திருமாவளவன் தலைமையிலான விசிக, தலித் மக்களின் உரிமைகள், சமூக நீதி, சாதி ஒழிப்பு போன்ற விவகாரங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கட்சி என்பதால், இந்த முடிவு பலராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. முதலில் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்திருந்தாலும், தவெக தரப்பில் இருந்து அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு வந்தபோது, விசிக உள்ளடிக்கு செல்லும் முடிவை எடுத்தது.
இதையும் படிங்க: "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
ஐந்து ஆண்டுகள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும் என திட்டவட்டமாக கூறினார். தவெக நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என்றும் நானும், கட்சியின் எம்.பி.க்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்போம் எனவும் தெரிவித்தார். தவெக அரசிற்கு ஆதரவு நல்கும் எந்த கட்சிகளும் வாக்கு தவற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் என்றும் உறுதியுடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தொழிற்சாலைகளிலேயே தொழிலாளர்களைத் தங்க வைப்பது சட்டவிரோதம் - திருமாவளவன் கண்டனம்!