பாஜகவோடு இணைப்பு தான் இருக்கு.. பிணைப்பே இல்லங்க! அதிமுக கூட்டணி குறித்து திருமா நச் பதில்..!
அதிமுகவுக்கு பாஜகவோடு இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில், எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று உறுதியாகக் கூறிய அவர், பாஜகவுடனான கூட்டணி வாக்குகள் சிதறாமல் இருக்கவே அமைக்கப்பட்டதாகவும், திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலடியாக இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இந்த சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பாக செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தார். அப்போது, அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது பாஜகவிற்கு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்தார். அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கும் நிலையில் யார் அதனை செய்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எப்போ அதிமுக இதை புரிஞ்சுக்க போகிறதோ? மறைமுகமாக வார்னிங் கொடுத்த திருமாவளவன்!!
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கும் நிலையில், பாஜகவினர் மட்டுமே கூட்டணி ஆட்சி குறித்து பேசுவதாகவும் மௌனமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று தனது மௌனத்தை கலைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுகவை திமுக தலைமையிலான கட்சிகள் கபளீகரம் செய்ய வாய்ப்பில்லை., என்றும் அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளவும் முடியாது., கூட உள்ள கட்சிகளால் மட்டும்தான் அதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
பாஜகவோடு அதிமுகவுக்கு இணைப்பு இருக்கிறது தவிர பிணைப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சிகரமான நிகழ்வு என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்., இது போன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்கு தமிழக அரசு காவல்துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை கொடுக்க வேண்டும் எனவும் அடுத்து ஒரு நிகழ்வு இது போல் நிகழக் கூடாது என்றும் கூறினார்.
ராமதாஸ் மேல் திருமாவளவனுக்கு ஏன் திடீர் பாசம் என்று அன்புமணி கேள்வி எழுப்பு இருந்த நிலையில் அதற்கு பதிலளித்தார். பாசம் என்பது வலிமையான வார்த்தை.,தந்தை மகனுக்கு இருக்கும் இடைவெளி பெரிதாக கூடாது என்பதுதான் நோக்கம்., அவர்களுக்கு இடையில் இடைவெளி ஏற்படக்கூடாது., அதற்குள் பாசிச சக்திகள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்த்த தான் முயற்சித்ததாக விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!