அண்ணாமலையார் கோவிலில் செங்கல் வழிபாடு..! ஆந்திர பக்தர்கள் செயலால் அதிர்ச்சி..!
அண்ணாமலையார் கோவிலில் ஆந்திர பக்தர்கள் செங்கல் வழிபாடு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சொந்தமாக வீடு கட்டவேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து விட்டு வணங்கிய ஆந்திர மாநில பக்தர்களால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. ஆந்திர பக்தர்களின் இச்செயலை கண்ட திருக்கோவில் நிர்வாகத்தினர் கூட்டுறவு பணியாளர்களை கொண்டு செங்கற்களை அகற்றினர். பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்ல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவிலில் மாதா மாதம் பௌர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்களும் வெள்ளி சனி ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கு 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை அண்ணாமலையாரிடம் கோரிக்கையாக வைத்து வழிபாடு நடத்தி காணிக்கை பூஜை உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் சொந்த வீடு கட்டுவது என்பது பெரும்பாலான பொது மக்களின் கனவாகவே இருந்து வரும் நிலையில் அண்ணாமலையாரை தரிசித்து வழிபட வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தாங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு வேண்டுதல் வைக்கும் விதமாக செங்கற்களை அண்ணாமலையார் கோயில் வளாகத்திற்குள் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசித்து விட்டு வெளியே செல்லும் வழியில் 5 -ம் பிரகாரத்தில் உள்ள பே கோபுரம் அருகே அடுக்கடுக்காக அடுக்கி வைத்துவிட்டு தாங்கள் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று அண்ணாமலையாரை வணங்கி செல்கின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!
அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் இதை பார்த்துவிட்டு தாங்களும் வீடு கட்ட வேண்டும் என்கின்ற வேண்டுதலை செங்கற்களை அடுக்கி வைத்து விட்டு அண்ணாமலையாரை வணங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரை அண்ணாமலையார் கோயிலில் இதுபோன்று செங்கற்களை அடுக்கி வைத்து வேண்டுதல் வைத்த நிகழ்வு ஏற்படாத நிலையில் இன்று புதிதாக யாரோ ஒரு பக்தர் செங்கற்களை அடுக்கி வைத்து வேண்டுதல் வைத்த நிலையில் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் அவரை பார்த்துவிட்டு அங்கிருந்த செங்கற்களை அடுக்கி வீடு கட்டுவதற்கு வேண்டுதல் வைத்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை பார்த்த கோயில் நிர்வாகம் கோயிலில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை வைத்து இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தனர். அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து வீடு கட்டுவதற்காக வேண்டுதல் வைக்கும் விதமாக செங்கற்களை அடுக்கி வைத்துவிட்டு சென்றதைப் பார்த்து அனைத்து பக்தர்களும் அதே போல் செங்கற்களை அடுக்கி வைத்து அண்ணாமலையரிடம் ஆந்திர பக்தர்கள் வேண்டுதல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!