திருவாரூரில் பரபரப்பு... அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி... நடந்தது என்ன?
திருவாரூர் அருகே அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவு சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளில் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...!
வீட்டிற்கு சென்ற மாணவ மாணவிகள் இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரிவித்ததன் பேரில் பெற்றோர்கள் உடனடியாக அவர்களை அருகிலுள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தொடர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களையும் பரிசோதனை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். தற்போது சிகிச்சை அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அனைவரும் வீடுகளுக்கு செல்லலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்தனர்
இதையும் படிங்க: பூமிக்கு வரும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன... மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்..!