×
 

12 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு!! இந்தியாவுக்கு ஆப்பா? கட் & ரைட்டாக பேசிய அதிபர் ட்ரம்ப்!

வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க அதிப​ராக, 2-வது முறை​யாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்​றார். அமெரிக்கா​வுக்கு இந்தியா உட்பட உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்​ப​தாக தெரி​வித்​தார். இதற்கு பதிலடி​யாக பரஸ்பர வரி விதிக்​கப்​படும் என அறி​வித்த அவர், கடந்த ஏப்​ரல் 2-ம் தேதி அதற்​கான பட்​டியலை​யும் வெளி​யிட்​டார். இதில் இந்​திய பொருட்​களுக்கு 26% வரி விதிக்​கப்​படும் என கூறப்​பட்​டிருந்​தது.

எனினும், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்த முன்​வந்​தன. இதையடுத்​து, இடைக்​கால ஒப்​பந்​தம் ஏற்​படுத்​திக் கொள்ள ஏது​வாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​தார் ட்ரம்ப்.

இதையடுத்​து, அமெரிக்கா​வுடன் பல நாடு​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தன. 90 நாள் காலக்​கெடு வரும் 9-ம் தேதி நிறைய​வடைய உள்ள நிலை​யில், பிரிட்​டன், வியட்​நாம் ஆகிய 2 நாடு​களு​டன் மட்​டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்​பாக ஒப்​பந்​தம் செய்​து​கொண்​டுள்​ளது.

இதையும் படிங்க: போரில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பிடம் கட் அன் ரைட்டாக பேசிய புடின்! சிக்கலில் உக்ரைன்..!

இந்​நிலை​யில், 12 நாடு​களுக்​கான வரி விதிப்பு தொடர்​பான உத்​தர​வு​களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 4-ம் தேதி கையெழுத்​திட்டுள்ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்று அவர் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறியதாவது ;

12 நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை வெளியிடப்படும். அன்றைய தினம் அந்தந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு விடும். இதை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிட்டு விடுங்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு 70 சதவீதம் வரையில் வரிவிதிப்பு இருக்கும். ஆக.,1 முதல் இந்த புதிய வரி அமலுக்கு வரும் என்றார்.

இந்த 12 நாடு​கள் பட்​டியலில் இந்​தியா இடம்​பெற்​றுள்​ளதா என தெரிய​வில்​லை. அதே​நேரம், இந்​தியா உள்​ளிட்ட சில நாடு​களு​டன் ஒப்​பந்​தம் ஏற்​ப​டாத நிலை​யில் 12 நாடு​கள் உ​ட​னான வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறி​யுள்​ளார். இதன்​மூலம், இந்​தியா உள்​ளிட்ட நாடு​களுக்கு அவகாசம் தந்​திருப்​ப​தாக கருதப்​படு​கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற உயர்மட்ட இந்தியக் குழு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது. அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை அணுகல் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே ஜூலை 9 ஆம் திகதிக்குள் வரி விலக்கு பெற இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனால் எந்த காலக்கெடுவின் கீழும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்காது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, இந்​தியா மீது அமெரிக்கா தன்​னிச்​சை​யாக வரி விதித்​தால், அந்த நாடு வி​திக்​கும் அதே அளவுக்​கு பரஸ்​பர வரி வி​திக்​க​வும்​ இந்​தி​யா திட்​டமிட்​டுள்​ள​தாக தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

இதையும் படிங்க: அடுத்த ஷாக் கொடுத்த டிரம்ப் அரசு..!! இந்தியாவுக்கு 500% வரி.. புதிய மசோதா தாக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share