×
 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7ம் ஆண்டு நினைவு நாள்.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்படுவதாக அறிந்ததும் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தொடர் போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். 

தூத்துக்குடியில் காற்றுமாசு படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மக்கள் நடத்திய போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அன்றைய தினம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாளாக பேரணியாக சென்றபோது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது. 

இதையும் படிங்க: துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஜோடி.. சிசிடிவியில் சிக்கிய காட்சி... பின்னணியில் சதிதிட்டமா?

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற குமரெட்டியாபுரம், பூபாலராயர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோயில் தெரு, மடத்தூர், லயன்ஸ்டவுன் உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க: எல்லையில் தினமும் துப்பாக்கிச்சூடு.. 4 வது நாளாக தொடரும் பதற்றம்.. இந்தியா பதிலடி தீவிரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share