×
 

சூதானமா இருங்க மக்களே... 3வது நாளாக பாய்ந்து வரும் வெள்ளம்... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

கரையோரம் உள்ள மக்களுக்கு நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கனமழை காரணமாக செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால்  அணையில் இருந்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் உள்ள மக்களுக்கு நீர்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சந்தவாசல் அருகே அமைந்துள்ள செண்பகத் தோப்பு அணை, ஜவ்வாது மலையிலிருந்து உருவாகும் கமண்டல நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  இந்த அணையால் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 48 ஏரிகள் பயன்பெறுகின்றன. 

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது   கனமழை பெய்து வருகிறது. இதனால் படவேடு செண்பகத் தோப்பு அணை உயர்மட்டம் முழு கொள்ளவு எட்டும் நிலையானது ஏற்பட்டது. 

இதையும் படிங்க: திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...! 

மேலும் செண்பகத் தோப்பு அணை நீர்மட்டம் உயர்ந்ததால் நீர்வளத்துறை துறை சார்பில் கடந்த  திங்கட்கிழமை அன்று அணை திறக்கப்பட்டது. 2  மதகுகள்  வழியாக கடந்த 4 நாட்களாக திறக்கபட்டு வினாடிக்கு  சுமார் 150  கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ஆரணி,  போளூர், கண்ணமங்கலம் , ஜவ்வாதுமலை ஆகிய பகுதிகளில் அதிகப்படியான கனமழை பெய்ததின் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 62 அடிக்கு தற்பொழுது 55 அடி அனைவரும் நிரம்பியுள்ளது. 

செண்பகத்தோப்பு அணைக்கு வருகின்ற 375 கன அடி நீர் அப்படியே வினாடிக்கு 375 கன அடி வீதம் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கண்ணமங்கலம், கொங்கரம்பட்டு, காட்டுகாநல்லூர் உள்ள நாகநதி ஆற்றிலும் படவேடு, சந்தவாசல், குன்னத்தூர் உள்ளிட்ட ஆற்றிலும் கலந்து ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கு  நீர் வரத்து குறைந்ததால் நீர்வளத் துறையினர் உபரி நீர் வெளியேற்றத்தை படிப்படியாக குறைப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்... செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு... வேக, வேகமாக நெருங்கி வரும் வெள்ளம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share