×
 

சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் திடீர் வருகை..! யாருடன் கூட்டணி...?

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா இன்று கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வருகிறார்.

பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு.

தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது.  ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. 

இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திற்கு பாஜக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே, NDA கூட்டணியில் மேலும் சில முக்கிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா இன்று தமிழகம் வருகிறார். 

இதையும் படிங்க: விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்..! அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்தது தவெக… தலையில் இறங்கிய இடி…!

கடந்த முறை சென்னைக்கு வந்திருந்த போது அன்புமணியுடன் பாண்டா கூட்டணி பேச்சு நடத்தியிருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழகம் வர இருக்கும் நிலையில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: அனைத்து கட்சி கூட்டமா?... நல்லா திசை திருப்புரீங்களே! முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share