×
 

தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

தென்காசி மலையடிப்பட்டியில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் மற்றும் உறை கிணற்றின் துல்லியமான அளவீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு மற்றும் ஈமத்தாழிகள் உள்ளிட்ட வரலாற்றுச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் இப்பகுதியில் வரலாற்றுத் தேடலுக்கான அகழாய்வுப் பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் போது, மண்ணிற்கு அடியில் புதைந்திருந்த பழங்காலச் செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவப் படிக்கிணறு ஒன்று முழுமையாகக் கண்டறியப்பட்டுள்ளது. முற்காலத் தமிழர்களின் உன்னதமான நீர் மேலாண்மை மற்றும் கட்டடக் கலைத் திறனுக்குச் சான்றாக இந்தச் செங்கல் படிக்கிணறு விளங்குவதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், இப்பகுதியில் நடத்தப்பட்ட தொடர் அகழ்வாராய்ச்சியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்து ஈமத்தாழிகள் (Urn Burials) மற்றும் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொல்வாழ்வியல் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால மனிதர்களின் வாழ்விட அமைப்புகள் மற்றும் பண்பாட்டு எச்சங்களை இந்தத் தொல்பொருட்கள் உறுதி செய்கின்றன. தென்காசி மலையடிப்பட்டி பகுதியில் கிடைத்துள்ள இந்த அரிய வரலாற்றுச் சான்றுகள், தமிழகத் தொல்லியல் துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுவதோடு, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அரசு திட்டங்களை தொடங்க கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உரிமை உள்ளது? தவெக அரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

இதையும் படிங்க: பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை: வாகனங்கள் கழுவ, செடிகளுக்கு ஊற்ற முற்றிலும் தடை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share