×
 

மாதந்தோறும் மின்கட்டண முறை எப்போது! மின்சார அமைச்சர் நிர்மல்குமார் க்ளியர்கட் பதில்!

மாதம் தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மலர் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் (தங்கெட்கோ) முன்பு நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை ஒழித்து முழுமையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

நேற்றிரவு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றில் பல வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான இந்தத் துறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.

மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால், முதலில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். “ஊழியர்களைப் பெருக்கிய பிறகுதான் மாதம் தோறும் மின்கட்டண கணக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். மீட்டர் படிப்பதற்கு போதுமான ஆட்கள் தேவை. அதன்பிறகு பொதுமக்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் வகையில் அனைத்து மாற்றங்களையும் செய்யப்படும்” என்று அவர் விளக்கினார்.

இதையும் படிங்க: 200 யூனிட் மின்சாரம் எல்லாருக்கும் இலவசம் இல்லை! முதல் கையெழுத்திலேயே ட்விஸ்ட் வைத்த விஜய்!! பதறும் மக்கள்!

மின்வாரியத்துக்கு தற்போது இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், அதை லாபகரமான நிறுவனமாக மாற்ற முழு முயற்சியும் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். முந்தைய ஆட்சிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளால் மின்வாரியம் படிப்படியாக தேய்ந்து போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் நலன் சார்ந்த முக்கிய திட்டமான 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டம் கடந்த 10-ம் தேதி முதல் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.

“ஊழல், முறைகேடு மற்றும் லஞ்சத்தை முழுமையாக ஒழித்தால் மட்டுமே அனைத்துத் துறைகளும் புத்துணர்ச்சி பெறும். மின்வாரியத்தை மக்கள் நலன் சார்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதியுடன் கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மின்வாரியத்தில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதக் கணக்கீடு, ஊழியர் பணியமர்த்தல் மற்றும் கடன் சுமையைக் குறைக்கும் திட்டங்கள் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share