ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!
முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். தமிழக அரசியலில் சமீப காலமாக பேசப்படும் பெயர்களில் ஒன்று ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். ஜோதிடராக அறியப்பட்ட இவர், தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கப்பட்ட பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், மாநில செய்தித் தொடர்பாளராகவும் உயர்ந்துள்ளார். தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், இவரை முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராதன் பண்டிட் வெற்றிவேல் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.
பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் கிரிக்கெட் வீரராகச் சிறப்பாக விளங்கிய இவர், 1980-களின் இறுதியில் ஜோதிடத் துறையில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜோதிட ஆலோசனை வழங்கியதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் அறிமுகமானார். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்பட்ட காலகட்டம் இவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
ஜோதிடம் மட்டுமல்லாமல், ஆன்மீகம், எண்கணிதம் உள்ளிட்ட துறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற இவர், பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளார். தனது இணையதளம் மூலமாகவும், பொது நிகழ்ச்சிகள் மூலமாகவும் ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வரும் இவர்,
இதையும் படிங்க: இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!
முதல்வரின் சிறப்பு பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொள்கைகளுக்கு எதிரானது என்றும் ஜோதிடருக்கு அரசு பணியா எனவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!