#BREAKING கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் அர்லேகர்... லண்டனில் இருந்து திரும்பிய மறுநாளே சி.எம். விஜய்க்கு குட்நியூஸ்...!
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் பெரும்பாலான மசோதாக்களுக்கு குறுகிய காலத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, நான்கு நாட்களிலேயே 6 மசோதாக்களுக்கும், ஐந்து நாட்களில் மேலும் 5 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!
இதன் மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் மொத்தம் 12 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.
இதில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்குப் பதிலாக, அரசியலமைப்பு நடைமுறைப்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இதனால், தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 12 மசோதாக்கள் சட்டமாக்கும் நடைமுறையை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "சமூகநீதி நாள்"..! தலைமைச் செயலகத்தில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி.. தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய CM விஜய்..!!