×
 

கடைகளில் இனி போர்டு இப்படி இல்லைனா? கடை உரிமையாளர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு!!

பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதியை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை வைத்திருப்பது கட்டாயம் என்ற நிலையில் அதனை யாரும் பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. கடைகளின் பெயரை தமிழில் எழுதி பெயர் பலகையாக வைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பெரும்பாலான கடைகளில் பெயர் பலகைகளை ஆங்கிலத்திலேயே வைத்துள்ளன. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றன.

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு  50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அது பின்னர் 2000 ரூபாயாக மாற்றப்பட்டது. பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அவற்றை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுவாமிநாதன், வணிகர் பேரமைப்பு நிர்வாகிகளுடன் ஏற்கனவே பேசியுள்ளோம்.

இதையும் படிங்க: புத்தகம் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை... அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!

ஆங்கிலத்தில் உள்ள பெயர் பலகைகளை மாற்றி, தமிழில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். தமிழில் பெயர் வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். இதை தமிழ் வளர்ச்சி துறை கண்காணித்து வருகிறது. தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு காணொளி மூலம் வழிகாட்டி வருகிறார்.

இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். இது மக்களாகவே உணர்ந்து செயல்படுத்த வேண்டும். இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதற்கான காலக்கெடு விதிக்கப்படும்... கர்நாடகாவில் முதலில் கன்னடம் எழுதப்பட்டு இருக்கும். அதுபோல தமிழகத்திலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு... நீட் விலக்கு பெறுவோம்... மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share