×
 

மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

நாளை மருந்து கடைகள் ஸ்டிரைக் அறிவித்த நிலையில், மருத்துவமனையுடன் கூடிய 5000 கடைகள் திறந்திருக்கும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் நாளை (மே 20) தனியார் மருந்து கடைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள சூழலில், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுடன் கூடிய 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாளை மருந்து கடைகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இது கோட்டை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலான பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், நாளை நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெரிய நர்சிங் ஹோம் வளாகங்களில் உள்ள 'மருத்துவமனைகளுடன் கூடிய மருந்தகங்கள்' (Hospital-attached Pharmacies) பங்கேற்கவில்லை. 

இதையும் படிங்க: செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!

எனவே, நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் எவ்வித தங்கு தடையுமின்றி தாராளமாகக் கிடைக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று டாப் கியர் விளக்கமளித்தார்.

தொடர்ந்து அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தகங்களில் கூடுதல் கையிருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவசரத் தேவைகளுக்காகவும், மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களைத் தெரிவிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக உதவி மையங்கள் (Helpline Centers) சுகாதாரத்துறையின் மூலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நல்வாழ்வைப் பேணுவதில் தவெக அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் நாளை தேவையின்றிப் பதற்றமடைய வேண்டாம்" என்று மிக ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். புதிய சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மக்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினைக்குச் சாட்டையைச் சுழற்றி மாற்று வழிமுறைகளைக் கையாண்டுள்ள அமைச்சர் அருண்ராஜின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 

இதையும் படிங்க: புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share