குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!
குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற தலைப்பில், தமிழக பாஜக சார்பில் திமுக அரசு மீது குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இன்று ஒரு விரிவான 'குற்றப்பத்திரிகையை' வெளியிட்டுள்ளது. சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய அமைச்சர் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இதனை வெளியிட்டார்.
குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022-ல் 1,414 ஆக இருந்த வழக்குகள், 2024-ல் 1,885 ஆக அதிகரிப்பு, 2022-ல் 4,968 ஆக இருந்தது, 2024-ல் 6,969 ஆக உயர்வு, 2022-ல் 3,260 ஆக இருந்த வழக்குகள், 2024-ல் 5,319 ஆக உயர்ந்துள்ளது, புனிதமான தமிழக மண் போதைப்பொருட்களால் சீரழிக்கப்படுவதாகவும், தமிழகம் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக என்றால் டிபார்ட்மெண்டல் கட்சி! ஸ்டாலினின் தேர்தல் அறிக்கையை விளாசிய வானதி சீனிவாசன்!
குற்றப்பத்திரிகை வெளியீட்டைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான மையக்குழு கூட்டம் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் போட்டியிட உள்ள முதற்கட்ட 27 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி தலைமையின் ஒப்புதல் பெறப்பட்டு நாளை அல்லது நாளை மறுநாள் (ஏப்ரல் 1 அல்லது 2) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில முக்கியத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதில் மட்டும் இன்னும் சிறிய அளவிலான குழப்பம் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், எச்.ராஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திமுக ஆட்சியின் மக்கள் விரோதச் செயல்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்த 'குற்றப்பத்திரிகை' முக்கிய ஆதாரமாக இருக்கும் என பாஜகவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை! கேரள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு!