இளைஞர்கள் எதிர்காலம் கிள்ளுக் கீரையா? TNPSC தேர்வுத்தாளில் கவனக்குறைவு... அண்ணாமலை கண்டனம்..!
டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் தயாரிப்பதில் கவனக்குறைவு இருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருப்பதாகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, the god of hair cutting என்று மொழிபெயர்த்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது என்று கூறினார். அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, 2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது என்பதை,
இதையும் படிங்க: உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…
It Begged the United Nations award என்பதை பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் என தெரிவித்தார். திமுக தலைவர்கள், காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என விமர்சனம் செய்துள்ளார்.
எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது நல்லாட்சியா? கற்பனை செய்யவே நடுங்குவாங்க! அண்ணாமலை சாடல்…