#BREAKING: TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின… அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!
கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வுகளுக்கான முடிவுகள் என்று வெளியாகின.
அரசுப்பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் தான் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணபித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தி தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என்ற அடிப்படையில் பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் ஆகிய 8 உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டது. குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில், குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!
சப் கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர் உள்ளத்தை 70 பதவிகளுக்காக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் மூன்றாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் முதன்மை தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தான் NO.1.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!!