"சமாதானம்"...! அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு வாபஸ்..! டி.ஆர். பாலு எடுத்த முக்கிய முடிவு..!!
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி. ஆர். பாலு வாபஸ் பெற்றார்.
2023 ஏப்ரல் மாதம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் திமுக தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டார். குறிப்பாக டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாலு குடும்பத்துக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவிந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பாலுவின் பெயருக்கும், குடும்பத்தினரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2023 மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் பாலு தரப்பு, அண்ணாமலை தனது பத்திரிகையாளர் சந்திப்பில் தவறான தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயரை கெடுத்ததாக வாதிட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீண்ட காலம் விசாரணைக்கு உள்ளானது. 2025-2026 காலகட்டத்தில் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தனர். குறிப்பாக 2026 பிப்ரவரி மாதம் அண்ணாமலை தானே நீதிமன்றத்தில் பாலுவை குறுக்கு விசாரணை செய்தார்.
இதையும் படிங்க: அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! We the Leaders அமைப்பின் தலைவராக முதல் குரல்!!
இந்த நிலையில் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி ஆர் பாலு வாபஸ் பெற்றார். இரு தரப்பினரிடையே நீதிமன்ற வளாகத்தில் சட்டபூர்வ வாக்குவாதங்கள் நிலவி வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டி ஆர் பாலு வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கை முடித்து வைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை விசாரணையின் போது அண்ணாமலை தரப்பில் மிகக் கடுமையான மற்றும் காரசாரமான குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!