சென்னையில் பயங்கரம்... திருநங்கை கோர மரணம்... மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்...!
சாலையில் நடந்து சென்ற திருநங்கை மீது மின்சார வயர் அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சாலையில் நடந்து சென்ற திருநங்கை தலையில் மின்வயர்பட்டு மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு பகுதியை சேர்ந்த திருநங்கை புஷ்பா என்கிற புஷ்பராஜ் நேற்று இரவு கடற்கரை நிலையம் அருகே உணவு அருந்திவிட்டு சாலையை கடப்பதற்காக தடுப்பு சுவர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மின் உலக்கிலிருந்து உயர் ஒன்று தொங்கியிருக்கிறது. அந்த உயர் திருநங்கை புஷ்பா மீது தலையில் பட்டிருக்கிறது. அப்பொழுது அதிலிருந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து திருநங்கை புஷ்பாவின் சடலத்தை மீட்டு போலீசார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இதுதான் லாஸ்ட் வார்னிங்!! மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விடுத்த இறுதி எச்சரிக்கை!
மேலும் புஷ்பாவுடைய உறவினர்கள் மின்சார ஊழியர்களின் அலசியத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Exit Poll Ban!! 5 மாநில தேர்தல் நிலவரம்!! கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை!!