×
 

நீலமயமான திருச்சி.. தொண்டர்கள் புடைசூழ திருமா மதச்சார்பின்மை பேரணி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் இன்று மதச்சார்பின்மை பேரணி நடைபெற்றது.

மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தந்த திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நீல கோட்-சூட் அணிந்து கலக்கலாக திருமா என்ட்ரி கொடுத்தார். 

அவர் மட்டுமல்ல ஒட்டு மொத்த தொண்டர்களும் நீல நிறக் கொடி, நீல நிற உடை, நீல வண்ண கோட் சூட் அணிந்து வந்திருந்தனர். திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்தப் பேரணியால் திருச்சியே நீலமாக மாறியது. 

இதையும் படிங்க: திருமாவளவன் மீது பூக்கள் தூவ ரூ.9 லட்சமா? ஹெலிகாப்டர் வைத்து மாஸ் காட்டும் விசிக!!

முத்தலாக், வக்பு திருத்த சட்டம், மதசார்பின்மைக்கு மற்றும் அரசமைப்புக்கு எதிரானது.,அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இப்பேரணி நடைபெற்ற நிலையில், பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தான் இல்லாமல் கூட்டணியா? அண்ணாமலை இதை விரும்பவில்லை... ஒரே போடாக போட்ட திருமாவளவன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share