NDA- வில் உறவாடும் TTV... தனிக்கட்சி தொடங்கும் சசிகலா..? ஆதரவாளர்களை களம் இறக்க திட்டம்...!
சசிகலா தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து விலகி இருந்தாலும், அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அண்ணா நினைவு நாளின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆதரவாளர்களை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் நடந்த கலந்துரையாடல்களில், தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததாக தெரிகிறது.
இதனால், சசிகலா தனியாக புதிய கட்சி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் தேர்தலை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. இன்னும் சில நாட்களில் அல்லது ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி "அம்மா அதிமுக" போன்ற பெயரில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் பேசப்படுகிறது. ஆதரவாளர்கள் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளதால், அவர் தனி பாதையில் செல்ல வாய்ப்பு அதிகம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதேநேரத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுக, அதிமுகவுடன் இணைந்து என்.டி.ஏ கூட்டணியில் தொடர்ந்து செயல்படுவதால், சசிகலாவுக்கு இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சசிகலா - தினகரன் இடையேயான உறவு ஏற்கனவே பிளவுபட்ட நிலையில், அண்மையில் அமமுகவின் மாணவியர் அணி செயலாளரான ஜீவிதா நாச்சியார் சசிகலாவை சந்தித்ததால், தினகரன் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்..! பணிச்சுமை கூடாது... மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிடிவி வலியுறுத்தல்..!
இது கட்சியின் உள் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் நடவடிக்கையாக இருந்தாலும், சசிகலா ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனிக்கட்சியை தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் இறக்க சசிகலா ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயை மிரட்டும் அவசியம் பாஜகவுக்கு இல்லை..! திமுகவுக்கு பயம்..! நயினார் நாகேந்திரன் விளாசல்..!