×
 

"அடிச்சே கொன்னுட்டாங்க"..! கதறும் குடும்பம்... தூத்துக்குடி சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடக்கம்..!

தூத்துக்குடி இளைஞர் பலியான சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் தெம்பாக்கம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான அருணாச்சலம். சட்டவிரோதமாக மது விற்றதாக 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸ் இளைஞர் அருணாச்சலத்தை ஜூலை 17ஆம் தேதி கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலத்தின் தலை, கால் பகுதிகளில் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அருணாச்சலத்தை அடித்தே கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழந்த அருணாச்சலத்தின் உடலில் போலீசார் தாக்கியதற்கான காயங்கள் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 வயதான இளைஞர் அருணாச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதித்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி விசாரணை கைதி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மேஜிஸ்திரேட் விசாரணை தொடங்கிய. தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயராஜ் விசாரணையை தொடங்கினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி இளைஞர் மரணம்..! லாக் அப் டெத்..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

போலீசார் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளதால் அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். உடல் வைக்கப்பட்டுள்ள பிணவறைக்குச் சென்று பார்வையிட்ட நீதிபதி அருணாச்சலம் குடும்பத்தாரிடம் விசாரணையில் ஈடுபட்டு உள்ளார். பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share