அரசு மருத்துவர் தற்கொலை..? மன உளைச்சலா..? தூத்துக்குடியில் பரபரப்பு..!
தூத்துக்குடியில் மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரிந்து வரும் நவநீத பிரபு என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்வதற்கு முன்பு தென்பாக காவல் நிலையத்தில் தொலைபேசியில் தான் தற்கொலை செய்யப் போகிறேன் என தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து போலீசார் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கிட்ட நிலையில் இருந்த அவரை மீட்டனர். தூத்துக்குடி பிரையன்ட் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் நவீன் பிரபு இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று மாலை நவீன் பிரபு தனது வீட்டிலிருந்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு போன் மூலம் தகவல் செய்து விட்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தென் பாகம் காவல்துறையினர் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தனது வீட்டில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!