×
 

#BIGBREAKING: விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு... உச்சக்கட்ட பதற்றத்தில் கரூர்...!

விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. இதனிடையே, மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: இந்த கேள்விய விஜய் கிட்ட கேளுங்க... சட்டென மாறிய உதயநிதி ரியாக்ஷன்...!

39 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஜய் பிரச்சார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. கரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து விடக்கூடாது என்பதை அனைவரது வேண்டுதலாக இருக்கிறது.

இதையும் படிங்க: போலீஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்! அவ்ளோ மெத்தனம்... விளாசிய நயினார்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share