"டிஜிபி நியமிக்க வக்கற்ற திமுக"..! FAMILY FUND பதறல்நிதி... விளாசிய தவெக..!!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தவெக விளாசியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார் என்று எதிர்க்கட்சி தலைவரை தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்து உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும் என்றும் கூறி உள்ளது.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது என்று தவெக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது எனவும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது என்றும் Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு., நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர் உளறல்நிதி அண்ட் கோவினர் என்று சரமாரியாக கிண்டலடித்துள்ளது.
இதையும் படிங்க: CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!
Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார் என்றும் தெரிவித்துள்ள தவெக, பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: 2 முறை தேசிய கீதம்... சட்டசபையில் சரித்திர நிகழ்வு..! ஆளுநர் அர்லேகர் பெருமிதம்..!!