தேர்தல் விதிமீறல்... தவெக மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்த வழக்கு..! அதிரடி நடவடிக்கை..!!
சேலத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் பார்த்திபன் , அன்னதானப்பட்டி பகுதியில் நடந்த தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இப்தார் விருந்தில் பங்கேற்ற போது, தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறி பரிசு பொருள் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் மீது வீடியோ புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளுடன் கூடிய ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்த தேர்தல் அதிகாரிகள் இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் தவெக மாவட்டச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: Breaking! திமுக கூட்டணியில் இருந்து விலகியது தவாக!! 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி! வேல்முருகன் அறிவிப்பு!
தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று ரம்ஜான் தினத்தன்று அக்கட்சியின் சின்னம் மற்றும் கொடிகளுடன் மசூதியின் முன்பு குடிநீர் பாட்டில் விநியோகித்தாக வெளியான புகாரைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மூன்று பேர் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!