×
 

திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...! 

பெண்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம் என தமிழக வெற்றி கழகத்தினர் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார். 

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் லேபர் வார்டு எனப்படும் பிரசவ வார்டு, மற்றும் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு யூனிட் எனப்படும் என்ஐசியூ வேறு வேறு கட்டிடத்தில் இருப்பதால் அங்கும் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பதாலும், பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகிறார்கள் அதனை உடனடியாக சரி செய்து ஒரே இடத்தில் nicu மற்றும் பிரசவ வார்டு இருக்கும் படி செய்ய வேண்டும் என கேட்டு திருச்செங்கோடு பொதுமக்கள் சார்பில் தமிழக வெற்றி கழகத்தினர் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜுடன் வந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது: திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகம் புதிதாக அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் பிரசவ ஆண்டுக்கு அருகில் என் ஐ சி யு எனப்படும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார்டு இல்லாததால் பிரசவித்த பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் இது குறித்து பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த புகாரியின் அடிப்படையில் விரைந்து அதனை பிரசவார்டு இருக்கும் இடத்திற்கே nicu மாற்ற வேண்டுமென கோரி அரசு மருத்துவமனைக்கு மனு கொடுத்துள்ளோம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். 

நேற்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை கொடுத்தது பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டபோது தமிழகத்தில் நாளுக்கு நாள் தமிழகவெற்றி கழகத்தின் வளர்ச்சி பெருகி வருவதை கண்டும் ஆட்சியை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலும் தான் இந்த மகளிர் உதவித் தொகை 5,000 வழங்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி தான். பெண்களுக்கு கிடைக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் மாதத்திற்கு கொடுத்தது சரி, ஆனால் கோடை காலம் எனக் கூறி 2000 ரூபாய் கொடுத்தது அடுத்த நிதியாண்டுக்கான பணத்தை எந்த கணக்கில் கொடுத்தார்கள் எவ்வாறு எடுத்து செலவு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது இது குறித்து அந்த துறையின் செயலாளர். எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் எனக் கூறினார். 

இதையும் படிங்க: தனித்துப் போட்டி என திமுகவால் அறிவிக்க முடியுமா? தவெக அருண்ராஜ் சவால்..!

நேற்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தொடர்ந்து இதுபோல் ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது, பல பேர் விஜயை பார்க்க ஆர்வத்துடன் வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் அனுமதி சீட்டு கொடுத்து தான் நிர்வாகிகளை உள்ளே வர அனுமதித்தோம். காவல்துறையினர் ஒவ்வொருவரையும் பரிசீலித்து தான் உள்ளே அனுப்பினார்கள். ஆனாலும் இவர் எப்படி உள்ளே வந்தார். எந்த அனுமதி சீட்டில் வந்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கம் அடைந்தார் என கேள்விப்பட்டவுடன் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் உதவி குழுவின் மூலம் முதலுதவி  கொடுத்து எங்கள் ஆம்புலன்ஸ் மூலம் தான் கொண்டு சென்றோம்.

காவல்துறையினர் ஒவ்வொருவருடைய சீட்டையும் பரிசளித்தும் இவர் எப்படி உள்ளே வந்தார் என தெரியவில்லை. ஏற்கனவே இவர் ஆஞ்சியோ செய்துள்ள நிலையில் மயக்கம் படபடப்பு உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்தவுடன் எங்கள் மருத்துவ குழுவினர் விரைந்து முதலுதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக வெற்றி கழகம் தயாராக உள்ளது மாவட்ட செயலாளர் மூலம் விசாரித்து வருகிறோம் எனக் கூறினார். 

இதையும் படிங்க: எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share