விஜய் மாமாக்கு ஓட்டு போட சொல்லுங்க..! குழந்தைகளிடம் வாக்கு கேட்டதாக போலீசில் புகார்..!
குழந்தைகளிடம் ஓட்டு கேட்டதாக விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஒரு தனித்துவமான மற்றும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.
அந்தக் கூட்டம் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்றது. அப்போது அவர், தன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை நேரடியாக அணுகி பேசினார். விஜய் தன் உரையில், “இந்த நேரத்துல, ஒவ்வொரு வீட்டுல இருக்கிற என்னுடைய குட்டி நண்பா, நண்பீஸுக்கு ஒரு ரிக்வெஸ்ட்” என்று தொடங்கினார்.
அவர்களுக்கு சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய் போன்றவை வேண்டுமானால், அழுது, அடம் பிடித்து, ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் கேட்பது போலவே, தங்கள் வீட்டில் உள்ள பெற்றோர், சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அண்ணன், அக்கா உள்ளிட்ட ஓட்டு போடும் வயதுடைய அனைவரிடமும் “விஜய் மாமாவுக்கு” ஓட்டு போடச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “இந்த ‘விஜய் மாமா’ ஜெயிக்கணும்னு, நம்ம தமிழ்நாடு ஜெயிக்கணும்னு உங்க வீட்டுப் பெரியவங்களிடம் அடம் பிடிச்சு, விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க” என்று அவர் வலியுறுத்தினார். இந்த வேண்டுகோளை அவர் இனிமையாகவும், குழந்தைகளின் மொழியில் புரியும் வகையிலும் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: மரக்காணத்தில் பரபரப்பு... இரும்புக் கம்பியால் திமுக நிர்வாகி மண்டையை பொளந்த தவெகவினர்... காரணம் என்ன?
இந்த நிலையில் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பெற்றோரிடம் அடம் பிடித்து ஓட்டு போட சொல்லுங்க என்று விஜய் கூறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாலகிருஷ்ணன் புகார் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!