#BREAKING: சேலம் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி உயிரிழப்பு..! பேரதிர்ச்சி..!
சேலம் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் விஜயின் பிரச்சார நிகழ்ச்சி உற்சாகத்துடன் நிறைவு பெற்றது. அந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை என்று கூற வேண்டும். ஏனென்றால், சேலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்றபோது வலிப்பு ஏற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சூரஜ் என்பவர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சூரஜ் சிகிச்சை பண்ண நன்றி உயிரிழந்து விட்டார். கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வடுக்கள் மறைவதற்குள் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விஜயின் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இதையும் படிங்க: செங்கோட்டையன் படத்தோட போஸ்டர் ஒட்டுனது குத்தமா?... தவெக இளைஞரை பொளந்தெடுத்த விஜயின் விழுதுகள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!
இன்று சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் நிர்வாகி சூரஜ் என்பவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடும் வெயில் காரணமாக ஏற்கனவே மூன்று பேர் மயக்கம் அடைந்து இருந்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலம் TVK பிரச்சாரத்தில் உற்சாகம்.. சாட்டையை சுழற்றிய விஜய்... தொண்டர்கள் செம்ம குஷி..!