×
 

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூவி, கூவி டோக்கன் கொடுத்த தவெக நிர்வாகிகள்... கடைசியில் என்ன கொடுத்தாங்க தெரியுமா?

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுக்கூட்டம். பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன். என்ன கொடுத்தார்கள் தெரியுமா?

திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூர் கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஆறுமுகநேரி பஜார் திடலில் நடந்தது.தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சம்பத்குமார் மயூரி காமராஜ் ஆகியோர் கொள்கை எழுச்சி உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்திற்காக ஆறுமுகநேரி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வரவழைக்கப்பட்டனர். 

அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. டோக்கன் மூலம் பணம்  கொடுப்பார்களா அல்லது பொருள்கள் தருவார்களா என்று நிகழ்ச்சி பாதி நிறைவடை முன்னரே பெண்களும் பொதுமக்களும் டோக்கனுக்கு என்ன தருவார்கள் என்று தெரியாமல் தவித்தனர்.  கூட்டத்துக்கு வந்திருந்த பெண்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்ததால் அதிக சிரமத்துக்கு ஆளானார்கள்.

 கூட்டம் முடிவதற்கு முன்னாலே கூட்டத்துக்கு வந்த பெண்கள் அனைவரும் கிளம்பிவிட்டனர் இதனால் கூட்டத்திற்கு போடப்பட்ட சேரில் ஆட்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. பெண்கள் அனைவரும் டோக்கனை கையில் வைத்துக்கொண்டு என்ன கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியாமல் அங்கும் இங்கும்மாக அலைந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: “அதிமுகன்னா அவ்வளவு எழக்காரமா..” - அமித் ஷாவால் அப்செட்டில் எடப்பாடி... விஜயால் என்.டி.ஏ. கூட்டணிக்குள் புகைச்சல்...!

இதையடுத்து அங்கிருந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் அவர்கள் கேட்டனர். நிர்வாகிகள் மேடைக்கு பின்புறமாக உள்ள ஆறுமுகநேரி தமிழக வெற்றிக்கழக அலுவலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அப்போது அலுவலக அறைக்குள் செல்வதற்கு பெண்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு வாக்கு வாதம் ஏற்பட்டது.

 அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டது பெண்கள் ஒரே சத்தம் போட்டதனால் உடனடியாக நிர்வாகிகள் அங்கு வந்து அலுவலகத்தின் கதவை திறந்து தள்ளுமுள்ளுக்கு இடையே அரிசி பையை வழங்கி வந்தனர். இதனால் அந்தப் பகுதியே ஒரே சலசலப்பாகவும் பரபரப்பாகவும் காணப்பட்டது.

 கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் இந்த பைக்காகவா நாங்க இவ்வளவு நேரம் காத்திருந்தோம் என்று குறை கூறி சென்றனர். உள்ளே சென்று அவர்களுக்கு 5 கிலோ அரிசி பையை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் பணம் தருவார்கள் என்று நினைத்து ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

பாஜக தலைவர்கள் பொதுக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும், “புதிய அரசியல் சக்திகளுக்கு எங்கள் கூட்டணியில் இடம் இருக்கிறது” போன்ற கருத்துகளை வெளியிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தங்களோடு இணைக்க  சிக்னல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு, தவெகவின் இளைஞர் ஆதரவை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அது வாக்கு கணக்கில் பலம் தரும் என்ற மதிப்பீடு பாஜக வட்டாரங்களில் இருப்பதாக பேசப்படுகிறது.

இதனால் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் 50 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க அதிமுகவுக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாஜக தலைமை முக்கியத்துவம் தருவது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெக வருவதை இபிஎஸ் விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் தான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இணைவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் எனக்கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share