×
 

ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் போச்சே...!! - வாக்காளர்கள் மத்தியில் வாய் விட்டு கதறிய செங்கோட்டையன்... தவெகவினர் ஷாக்...!

நமக்கு அருள் தரும் முருகன் இருந்தாலும், நம்மை அழிக்கவும் ஒரு முருகன் இருக்கின்றார் என மத்திய அமைச்சர் எல்.முருகனை மறைமுகமாக சாடிய செங்கோட்டையன். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தமிழ்ச்செல்வியை ஆதரித்து இன்று காலை சத்தியமங்கலம் நகரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் பரப்பரை மேற்கொண்டார். 

அவர் பேசும் போது "நாம் முருகனை வழிபடுகிறோம். முருகன் நமக்கு அருள் தருகிறார். நம்முடைய கட்சியையே அழிக்க பார்க்கிறார் இந்த முருகன். திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நாம் துடிக்கின்றோம். சென்சார் மூலமாக திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. நேற்று படம் வெளியாகிவிட்டது. இது என்ன நியாயம் ? ஒரு ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெற்றிருக்கிறதா ? ஆயிரம் கோடி வருவாய் வருவதை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள். அந்த முருகன் எங்கே ? இந்த முருகன் எங்கே ? நாட்டில் நல்லது செய்வது போல் நடித்துக் கொண்டிருக்கும் முருகன் எங்கே? நமக்கு அருள் பாதிக்கும் முருகன் எங்கே ?.

நான் ஆட்சிக்கு வருவேன், திமுகவை வீழ்த்துவேன் என்கிறார் எடப்பாடி. பத்து தோல்வி கண்ட எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் அடையாளம். அவருக்கு போடும் ஓட்டு நோட்டாவுக்கு போடும் ஓட்டு. சின்னம்மா சசிகலாவுக்கு துரோகம் செய்தார், 2021 இல் பிஜேபிக்கு துரோகம் செய்தார், 18 எம்எல்ஏக்களின் நீக்கி துரோகம் செய்தார், ஓபிஎஸ் நீக்கினார், பிரேமலதாவுக்கு துரோகம் செய்தார், அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணிக்கு வருவேன் என அவருக்கும் துரோகம் செய்தார். 

இதையும் படிங்க: ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!

நான் கவுண்டர் என்று கவுண்டர்கள் இருக்கும் இடத்தில் போய் பிரச்சாரம் செய்கிறார். அப்ப மத்தவங்க எல்லாம் என்ன ? ஆனால் நாம் ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வாக்கு கேட்கின்றோம். குழந்தைகளை பார்த்து, "காலையில் வருகின்ற 23ஆம் தேதி காலையில் எழுந்தவுடன் குளிங்க. குளித்தவுடன், இந்துக்களாக இருந்தால் சாமி கும்பிடுங்கள். இஸ்லாமியர்களாக இருந்தால் தொழுகை செய்யுங்கள். கிறிஸ்தவர்களாக இருந்தால் இயேசுவை யாசியுங்கள். உங்க அப்பா அம்மா காலில் விழுகுங்க. மாமன் மச்சான் இருந்தால், காலில் விழுகுங்க. விஜய் அங்கிளுக்கு ஓட்டு போட்டுட்டு வாங்க. அப்பதான் நாங்க சாப்பிடுவோம்னு சொல்லுங்க. இப்படி சொன்னால் தான் நாட்டில் புரட்சி ஏற்படும்" என பேசினார்.
 

இதையும் படிங்க: அதிர்ச்சி..! தவெக செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு..! விளக்கம் கேட்டு கெடு விதித்த அதிகாரிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share