காங்கிரஸில் இருந்து விலகிய ஆட்டோ ஓட்டுநர்கள்..! தவெகவில் ஐக்கியம்..!!
காங்கிரஸில் இருந்து விலகிய ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் உள்ள டாக்டர் டி.கே. பிரபு, தமிழக அரசியல் களத்தில் புதிய முகமாக உருவெடுத்து வரும் ஒரு முக்கிய பிரமுகர். காரைக்குடியைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவரான அவர், மக்கள் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவராக அறியப்படுகிறார்.
சமீப காலமாக அவரது சமூக சேவை நடவடிக்கைகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தளபதி விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்த பிறகு, அவர் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்று, கட்சியின் அடிப்படை மட்டப் பணிகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.
டி.கே. பிரபு தனது மருத்துவப் பணியுடன் சேர்த்து சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான உதவிகள், நீர் பிரச்சனை தீர்வு உள்ளிட்ட பல களப்பணிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்தகைய மக்கள் சேவை அவரை காரைக்குடி பகுதியில் பிரபலமாக்கியது. த.வெ.க-வில் இணைந்ததன் மூலம் அவரது பணிகள் மேலும் விரிவடைந்தன.
இதையும் படிங்க: எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!
கட்சியின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் பிரபு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பிரபு முன்னிலையில் காங்கிரஸிலிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சித் தொண்டுகளை அணிவித்து பிரபு வரவேற்றார்.
இதையும் படிங்க: “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!