எக்கேடு கெட்டு வீணாப்போனா என்ன? யாருக்காக உங்க ஆட்சி? வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு விஜய் கண்டனம்...!
நமக்கென்ன என்ற அலட்சிய போக்கு இருப்பதாக திமுக அரசை விஜய் சாடினார்.
திருத்தணியில் கத்தியுடன் ரீல்ஸ் எடுத்ததை தட்டி கேட்ட வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை என்றும் இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என்று விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: BLAST-U... BLAST-U..! "தளபதி கச்சேரி"... கோட் சூட்டில் மாஸாக கிளம்பிய ஜன நாயகன்...!
தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை என்றும் இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை எனவும் தெரிவித்தார். தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை., புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை., இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துவதாக விஜய் காட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: " பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் விஜய்க்கு பாதுகாப்பு கிடையாது"... பகீர் கிளப்பும் நயினார் நாகேந்திரன்...!