சொன்ன TIME- க்கு வரணும்... மிஸ் ஆக கூடாது.!! விஜய்க்கு பறந்த வார்னிங்..!!
நாளை முதல் விஜய் பிரச்சாரம் நடத்தும் நிலையில் சரியான நேரத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளார். இந்த பிரச்சாரம் சென்னை பெரம்பூர் தொகுதியில் இருந்து தொடங்கவுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில், ஒரே நாளில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தவெகவின் தேர்தல் உத்தியில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
மார்ச் 28-ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் பெரம்பூர் எம்கேபி நகரில் பிரச்சாரம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கொளத்தூர் தொகுதி, மதியம் 2 மணிக்கு வில்லிவாக்கம், பிற்பகல் 3 மணிக்கு அண்ணா நகர் பகுதி மற்றும் மாலை 4 மணிக்கு விருகம்பாக்கம் தொகுதியில் பரப்புரை நடைபெற உள்ளது.
இந்த ஐந்து தொகுதிகளும் சென்னை மாநகரப் பகுதியில் அமைந்துள்ளன. பெரம்பூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவது விஜய் தானே அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: என்னாச்சு..? தவெக வேட்பாளர் அறிமுகம் திடீர் ஒத்திவைப்பு...! செக் வைத்த தேர்தல் ஆணையம்..!!
இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். விஜய் பிரச்சாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் அதிகாரி, காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சரியான நேரத்திற்கு விஜய் களத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆதாய சூதாடி"..! "திமுக கைக்கூலி"..! பொன்ராஜை பொளந்து கட்டிய விஜய்..!!