நாகையில் விஜய் பேசுனது கரூரில் எதிரொலிக்குதோ? - அலர்ட் ஆன திமுக... ஆட்டத்தை ஆரம்பித்த தவெக...!
11 நிபந்தனைகளுடன் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த முறை நாகையில் உரையாற்றிய விஜய், இனிமேல் கட்டுப்பாடு போட்டீங்கன்னா நான் மக்களிடம் நேரடியாக போய் விடுவேன். நான் உங்களை பார்க்கக்கூடாதா? என்றெல்லாம் மக்களிடையே உரையாற்றியிருந்தார். இதனையடுத்து திருச்சியில் 25 கட்டுபாடுகள், நாகையில் 20 கட்டுப்பாடுகள் என தவெக தலைவர் விஜய்க்கு கடும் நிபந்தனைகளை விதித்து வந்த காவல்துறை இந்த முறை 11 நிபந்தனைகளுடன் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நாளை 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சார நிகழ்ச்சி நடத்திக்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலனை செய்த கரூர் நகர காவல்துறை 11 நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள சென்ட்ர மீடியன் பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தல் கூடாது. தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக்கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் போது தொண்டர்களை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இதையும் படிங்க: விஜயின் “SATURDAY அரசியல்”... விமர்சித்த உதயநிதி… பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்
வாகனங்கள் நிறுத்தும் இடங்களை முன் கூட்டியே அறிந்து முறையாக வாகனங்களை நிறுத்தும் இடத்தில் வரிசையாக நிறுத்துவதற்க்கு, கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு மின்சாரவாரியத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ஏதேனும் அவசர ஊர்தி வரும் பட்சத்தில் தொண்டர்கள் வழி விட வேண்டும்.
நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு அருகில் வணிக வளாகங்கள் மற்றும் IT நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதி என்பதாலும், அதிகப்படியான தொண்டர்கள் கலந்து கொள்வதால் முதல் உதவி சிகிச்சை செய்வதற்க்கு முன்னேற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்க்கு முறையாக தீயணைப்பு துறையினர், சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று இருக்க வேண்டும். கூட்டத்திற்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் தொடர்பாக மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும்.
பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதிக்கபடுகிறது. திருக்காம்புலியூர் ரவுண்டானாவானது தேசிய நெடுஞ்சாலையில் பிற மாவட்டங்களின் முக்கிய இணைப்பு சாலை என்பதால் எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் ரோடு சோ நடத்த அனுமதி இல்லை.
பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அனுமதி இல்லாமல் LED திரை மற்றும் மேடை அமைக்க கூடாது. இந்த நிபந்தனைகள் மீறாமல் நிகழ்ச்சியை நடத்தவும், அனுமதி பெறாமல் பதாகைகள் வைப்பதும், அவசர சேவை வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தினாலோ தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேற்று இபிஎஸ்... இன்று விஜய்... தவெகவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய காவல்துறை...!