கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!
தமிழர், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது, வீணாக கை வைக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கீழடி அகழாய்வு தொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடியின் தொன்மை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் தேவை என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து, கீழடி அகழாய்வில் கிடைத்த தரவுகளுக்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்பதாகவும், இதனால் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மறுப்பதாகவும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. கீழடி அகடாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு மறுப்பதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விஜய் அறிக்கையில், 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014இல் கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர். அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர். இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் திடீர் என அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
அதன் பிறகு, மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள ஸ்ரீராமன் என்பவரை இந்தியத் தொல்லியல் துறை நியமனம் செய்தது. மூன்றாம் கட்ட அகழாய்வு நிறைவுறும் தறுவாயில், கீழடியில் மேற்கொண்டு அகழாய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும், கிடைத்த பொருட்களே மீண்டும் கிடைப்பதாகக் கூறி ஆய்வினைத் ஸ்ரீராமன் நிறைவு செய்தார். அதன் பிறகு, கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது 10ஆம் கட்ட அகழாய்வுப் பணி, தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், தொல்லியல் ஆய்வுலகில் இந்த ஆய்வறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அசாமைத் தொடர்ந்து கோவா, பிறகு, மறுபடியும் சென்னை வட்டாரத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார்
இதையும் படிங்க: கபட நாடக திமுக.. பிளவுவாத பாஜக! சாதிவாரி கணக்கெடுப்பில் சமூக நீதி தேவை.. விஜய் வலியுறுத்தல்!
இதில் கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள். விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், 2 ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. ASI இயக்குநர் திரு. நாயக், இரண்டு நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, தேவையான திருத்தங்களைச் சேர்த்து, கீழடி அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.அறிக்கையில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகள், விரிவான தொல்லியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், விரிவான அறிவியல் சோதனை முடிவு ஆவணங்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது பதிலில் விளக்கினார்.
இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பும் இதேபோல இந்த ஆய்வில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல. கீழடி ஆய்வு முடிவுகள். அது, அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது.
ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. யுகம் யுகமாக. காலகாலமாக நீடித்து நிலைத்து நிற்கும் தமிழ் மண். சாதாரணமானது அன்று. ஒரு பெரும் கலாசார எரிமலை. அதைத் தொட நினைத்தால். விளைவு என்னவாகும் என்பதைச் சிறுகுழந்தையும் அறியும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. மட்டும் அதை உணராமல் எங்கள் உணர்வுடன் விளையாடுகிறது. பின்விளைவுகளை அனுபவித்துத்தான் புரிந்துகொள்வோம் என்று அவர்கள் எண்ணினால், அந்த அறியாமையைக் கண்டு நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ் கலாச்சாரம் என்பது எரிமலை அதனை தொட நினைத்தால் என்னவாகும் என சிறு குழந்தைக்கும் தெரியும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரீகம் இதை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்ய பாஜக அரச முயல்கிறது கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால் பாஜக காலம் காலமாக சொல்லும் கட்டுக்கதைகள் உடைப்படும் தமிழ் மண்ணை தமிழ் நாகரீகத்தை ஹிந்தி சமஸ்கிருத புழுதி கொண்டு மூடி மறைத்து விட பாஜக அரசு முயற்சிக்கிறது ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை நாகரீகத்தை கலாச்சாரத்தை மூடி மறைக்க பாஜக முயற்சி செய்கிறது. இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னை இளைய காமராஜர்-னு சொல்லாதீங்க! தவெக கல்வி விழாவில் விஜய் கோரிக்கை..!