"அறிவாலயத்து... அடக்கு வாயை"..! ஒரு அமைச்சரை பாத்து பேசுற பேச்சா..? கொந்தளித்த தவெக..!
திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பேச்சுக்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுகவின் திருகுதாளத் திருவாய் கொண்ட வெறும் வாயை மென்று வீண் வதந்தியை வாந்தியாக எடுப்பதில் வல்லவர், எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் என தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்து உள்ளது. திமுக ஏதோ அரசியல் புனிதம் பேசும் இயக்கம் என்று திக்கித் திணறி, முக்கி முனகி, சொத்தை வாதம் பேசிச் சொதப்புகிறார் என்றும் கூறியுள்ளது. தவெக எம்.எல்.ஏ.விடம் ஒட்டக பேரம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சரின் அடியாட்களைக் காவல் துறை அமுக்கிய பிறகும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யென்று ஜல்லி அடிப்பதாகவும் விமர்சித்து உள்ளது.
Vending machine வைத்து மற்ற கட்சியினரை விலைபேசும் விஷ ஜந்து திமுகவிற்கு வெட்கமே இல்லாமல் ஜால்ரா அடிக்கும் பரந்தாமன், வாயை அடக்கிப் பேச வேண்டியது அவசியம் என எச்சரித்து உள்ளது. ஒட்டக பேரம் நடத்திய முன்னாள் அமைச்சர், ஒருவருக்கும் தெரியாமல் ஓடி ஒதுங்கிப் பதுங்கி நடுங்கி மறைந்து அலையும்போதே திமுகவினர் வாய்க்கொழுப்பு எடுத்து வம்பளப்பது சகிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் விரும்பும் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் வாய்க்கு வந்தபடி பேசும் அறிவாலயத்தில் அலையும் பிராணியாக மாறுவதும் மாறாததும் பரந்தாமனுக்கே வெளிச்சம் என்றும் சொந்தக் கட்சியிலேயே விஷக்கடி பட்டு, தேர்தலில் போட்டியிட்டுத் தோற்கும் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் நம் மீது அவதூறாக அள்ளி வீசி வாய்விட்டுப் புலம்பிச் சலம்பி இருக்கிறார் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: கிழிந்து தொங்கும் ஊழல்..! பகல் கொள்ளை அடிக்கும் கமிஷன் அரசு..! தவெகவை பந்தாடிய திமுக..!!
பரந்தாமன் பேசும்போது அநாகரிகத்தின் உச்சமாக, ‘அரண்மனை நாயே அடக்கடா வாயை’ என்று அமைச்சரைப் பார்த்துச் சொல்கிறார். அதே போல நாமும், ‘அறிவாலயத்து … அடக்கு வாயை’ என்று சொல்லலாம் என்றும் ஆனால், நாகரிகம் கருதித் தவிர்க்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தவெகவில் மீண்டும் அதிரடி... 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!